சட்டென்று குறைந்த பிறப்பு விகிதம்… எச்சரித்த வல்லுநர்கள் – 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தந்த அரசு!

 

சட்டென்று குறைந்த பிறப்பு விகிதம்… எச்சரித்த வல்லுநர்கள் – 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தந்த அரசு!

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஐநா வெளியிட்ட அறிக்கையின்படி சீனாவின் மக்கள்தொகை 143 கோடியாகவும் இந்தியாவில் 137 கோடியாகவும் இருந்தது. 2027ஆம் ஆண்டு சீனாவின் மக்கள்தொகையைத் தாண்டி இந்தியா முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் கூறப்பட்டது. இச்சூழலில் சமீபத்தில் சீனாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சட்டென்று குறைந்த பிறப்பு விகிதம்… எச்சரித்த வல்லுநர்கள் – 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தந்த அரசு!

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீனாவில் நடத்தப்படும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி சீனாவின் மக்கள்தொகை 143 கோடியிலிருந்து 141 கோடியாகக் குறைந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறைந்துவரும் மக்கள்தொகையால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், மக்களின் நுகரும் தன்மையும் சரியும் எனவும் கூறப்பட்டது. இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அறியப்படும் சீனாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியைக் காணும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

சட்டென்று குறைந்த பிறப்பு விகிதம்… எச்சரித்த வல்லுநர்கள் – 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தந்த அரசு!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள் தொகை பெருக்க விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டது. 2016ஆம் ஆண்டு 1.8 கோடியாக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை தற்போது 1.2 கோடியாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதித்தது தான் என்று தெரிவிக்கப்பட்டது. குடும்பத்துக்கு இரண்டு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி என்பது அதில் ஒரு கட்டுப்பாடாக இருந்தது. தற்போது அந்தக் கட்டுப்பாடை நீக்கி மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி கொடுத்துள்ளது.