குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி… விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

 

குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி… விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

திருப்பத்தூர்

ஆம்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் விரக்தியில் தம்பதியினர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூரை சேர்ந்தவர் லோகேஷ்வரன்(44). ஓட்டுநர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த்(8) என்ற மகனும், ஹரிபிரித்தா(6) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஷ்வரன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆம்பூர் அருகேயுள்ள கைலாசகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது, மலையில் உள்ள குளத்தில் மீன்பிடித்தபோது மூழ்கி குழந்தைகள் ஜஸ்வந்த், ஹரிபிரித்தா ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி… விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

தகவல் அறிந்து வந்த ஊராமாபாத் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தைகள் இறந்ததால் வாழ்வில் விரக்தியடைந்த தம்பதியினர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடித்தனர். இதனை அடுத்து, நேற்று முன்தினம் ஆம்பூர் ரயில் நிலையம் சென்ற இருவரும் குளிர்பானம் ஒன்றை வாங்கி, அதில் பூச்சி மருந்தை கலக்கி லோகேஷ்வரன் முதலில் குடித்துள்ளார்.

குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி… விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

பின்னர், லட்சுமி குடிக்க முயன்றபோது, அதனை தட்டிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி அலறி துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், லோகஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இறந்த வேதனையில் தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.