வாணியம்பாடி-வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலி

 

வாணியம்பாடி-வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலி

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மின்சார வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி-வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலி
மின்சார வாட்டர் ஹீட்டர்


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியில் வசிப்பவர் புருஷோத்தமன். இவர் இன்று காலை குளிப்பதற்காக வீட்டில், மின்சார வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை

வாணியம்பாடி-வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலி
குழந்தை பலி

அனனியா, தவறுதலாக வாட்டர் ஹீட்டரில் கை வைத்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இது குறித்து தவலறிந்த வாணியம்பாடி போலீஸார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். – பழனி