முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம்குழந்தை- பொதுமக்கள் மீட்பு!

 

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம்குழந்தை- பொதுமக்கள் மீட்பு!

திருவள்ளூர் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம்குழந்தை- பொதுமக்கள் மீட்பு!

பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை வராக சுவாமி கோயில் அருகே, பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், அங்கு தேடிப் பார்த்தபோது முட்புதரில் பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன, பெண்குழந்தை கிடைந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம்குழந்தை- பொதுமக்கள் மீட்பு!


அதை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமாக இருப்பதை அறிந்து சிகிச்சை அளித்து குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து மருத்துவர்களின் தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்வையிட்டுச் சென்றனர்.

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம்குழந்தை- பொதுமக்கள் மீட்பு!

பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.