‘எல்லை காவல் படை வீரர்களை பார்த்து சல்யூட் அடித்த சிறுவன்’ வைரல் வீடியோ!

 

‘எல்லை காவல் படை வீரர்களை பார்த்து சல்யூட் அடித்த சிறுவன்’ வைரல் வீடியோ!

லடாக்கில் பணியாற்றி வரும் காவல் படை வீரர்களுக்கு சிறுவன் ஒருவர் சல்யூட் அடித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்திய-சீன எல்லையான லடாக்கின் சுஷுல் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவன், அந்த வழியாக சென்ற காவல்படை வீரர்களை பார்த்து அவர்களது பாணியிலேயே சல்யூட் அடித்திருக்கிறார். இதனை பார்த்து ஆச்சர்யமடைந்த அதிகாரி ஒருவர், சிறுவன் சல்யூட் அடிப்பதை வீடியோ எடுத்துள்ளார். மேலும், அந்த சிறுவனுக்கு முறையாக எப்படி சல்யூட் செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

‘எல்லை காவல் படை வீரர்களை பார்த்து சல்யூட் அடித்த சிறுவன்’ வைரல் வீடியோ!

இந்த வீடியோ தற்போது திபெத் எல்லை காவல் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில், “மிகச் சிறந்த ராணுவ அதிகாரியாக அந்த சிறுவன் வருவான், சிறியவனாக இருந்தாலும் பெரியவனாக இருந்தாலும் ஒரு இந்தியராக இருந்தால் இதயம் துடிக்கும், ஜெய் ஹிந்த்” என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே ஆயிரக் கணக்கான வியூஸ்களை பெற்றிருக்கிறது.