சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

 

சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் கோவில்பட்டியை சேர்ந்த நதிவதனா என்ற பெண்ணுக்கு சின்ன தாராபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து நதிவதனாவுக்கும் மாமியார் காளிஸ்வரீக்கும் ஏற்பட்ட தகராறில் நதிவதனாவை மாமியார் குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.

சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

இதுகுறித்து வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நதிவதனா தனது பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையை கணவரின் தம்பி கட்டாய திருமணம் செய்ததாக புகார் அளித்தார். அத்துடன் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் ஆதாரமாக சமர்ப்பித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நதிவதனாவின் மாமியார் வீட்டாரை விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

அதாவது நதிவதனாவின் கணவர் செல்வத்தின் தம்பி தமிழரசன் பத்தாம் வகுப்பு படிக்கும் இவரின் தங்கையை விரும்பியுள்ளார். இதை சாதகமாக்கி கொண்ட நதிவதனா வரதட்சனை ஏதும் இல்லாமல் திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தங்கையை கோயிலுக்கு அழைத்துச் சென்று தமிழரசனுக்கு மாமியார் குடும்பத்துடன் கூட்டு சேர்ந்து கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறால் அவர்களை பழிவாங்க நினைத்து தங்கையின் திருமண செய்தியை போலீசில் புகார் தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு கட்டாய திருமணம் : போலீசிடம் நாடகமாடிய சகோதரி உள்பட 10 பேர் கைது!

இதையடுத்து சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோர், சிறுமியுடன் குடும்பம் நடத்திவந்த தமிழரசன், சகோதரி நதிவதனா மற்றும் அவரின் கணவர் வீட்டார் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.