“குழந்தையை கடத்தி ,பிச்சையெடுக்க வைத்து ..”ஒரு தம்பதிகள் செஞ்ச வேலைய பாருங்க

 

“குழந்தையை கடத்தி ,பிச்சையெடுக்க வைத்து ..”ஒரு தம்பதிகள் செஞ்ச வேலைய பாருங்க

நாட்டில் குழந்தை கடத்தலை தடுக்க அரசாங்கம் பல சட்டங்கள் இயற்றியுள்ளது .இருந்த போதிலும் ,நாளுக்கு நாள் குழந்தை கடத்தல் அதிகமாகிக்கொண்டேதான் வருகிறது . அவர்களை கடத்தும் கூட்டம் பிச்சையெடுக்க வைக்கவும் ,பெண் குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விறக்கப்டுவதும் நடக்கிறது .இந்நிலையில் ஒரு தம்பதிகளே ஒரு குழந்தையை கடத்தி பிச்சையெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது .

“குழந்தையை கடத்தி ,பிச்சையெடுக்க வைத்து ..”ஒரு தம்பதிகள் செஞ்ச வேலைய பாருங்க

டெல்லியில் பட்லா ஹவுஸைச் சேர்ந்த ஆசியா கட்டூன் என்பவரின் ஒன்னரை வயது குழந்தை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தங்களின் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.அப்போது காணாமல் போன அந்த குழந்தை
ஜாமியா நகரில் உள்ள ஜோகாபாய் விரிவாக்கத்தில் முகமது அலி மற்றும் ஜெஹ்னா என்ற தம்பதிகளிடம் இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது அந்த குழந்தையை கடத்திய அந்த தம்பதிகள் பிச்சை எடுக்க உபயோகப்டுத்திய அதிர்ச்சியான தகவல் வெளியானது .பிறகு அந்த குழந்தையை மீட்ட போலீசார் அந்த குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள் .
2020 ஆம் ஆண்டில், தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவு, காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட 1,004 பேரை மீட்டது. இவர்களில் 102 மைனர் பையன்களும் 107 மைனர் சிறுமிகளும் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

“குழந்தையை கடத்தி ,பிச்சையெடுக்க வைத்து ..”ஒரு தம்பதிகள் செஞ்ச வேலைய பாருங்க