காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தை பலி… உறவினர்கள் போராட்டம்…

 

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தை பலி… உறவினர்கள் போராட்டம்…

தூத்துக்குடி

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததை கண்டித்து, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள பொல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாடசாமி. இவரது ஒன்றரை வயது மகன் மகிழரசன். இந்த நிலையில், நேற்று முன்தினம் மகிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தை பலி… உறவினர்கள் போராட்டம்…

மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று மதியம் குழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்த நிலையில், சிறுது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக கயத்தாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த கயத்தாறு போலீசார் குழந்தையின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துடன் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.