‘கடலில் மயமான 10 வயது சிறுவன்’ மீன் வலையில் சிக்கிய சடலம்!

 

‘கடலில் மயமான 10 வயது சிறுவன்’ மீன் வலையில் சிக்கிய சடலம்!

கடற்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன சிறுவனின் சடலம், மீன் வலையில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியில் வசித்து வருபவர் சகாய ராபின். இவரது மகன் ரோகித் (10). இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 29ம் தேதி தனது நண்பர்களுடன் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, கடலில் எழுந்த ராட்சத அலை ரோகித்தை அடித்துச் சென்றுள்ளது.

‘கடலில் மயமான 10 வயது சிறுவன்’ மீன் வலையில் சிக்கிய சடலம்!

தகவல் அறிந்த வந்த மீனவர்களும் கடலோர காவல் படையினரும் சிறுவனின் உடலை மீட்க முயன்றுள்ளனர். ஆனால், அலை இழுத்துச் சென்றதால் சிறுவனின் உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று வழக்கம் போல கட்டுமரங்களில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் விரித்த வலையில் சிறுவனின் உடல் சிக்கியிருக்கிறது.

சடலத்தை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்த நிலையில், அது ரோகித்தின் சடலம் தான் என அவரது பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் உடலை மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.