‘நெருங்கும் பண்டிகை காலம்’ : ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை!

 

‘நெருங்கும் பண்டிகை காலம்’ :  ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமை செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

‘நெருங்கும் பண்டிகை காலம்’ :  ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை!

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிற்பகல் 3 மணிக்கு  ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமைச் செயலர் சண்முகம். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , ஆன்லைன் பட்டா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

‘நெருங்கும் பண்டிகை காலம்’ :  ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை!

,முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதேபோல் தியேட்டர்கள், பூங்காக்கள் என பலவற்றிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.