தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா?… தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

 

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா?… தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 3,500ஐ எட்டியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடப்பட்டும் வரும் சூழலிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? என்ற கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா?… தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

லாக்டவுன் பற்றி விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். தற்போதைக்கு லாக்டவுன் பற்றி ஏதும் திட்டமிடப்படவில்லை. 7ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ராதாகிருஷ்ணனுடன் இன்று பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா?… தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

சுகாதாரத்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? என்னென்ன கட்டுப்பாடுகள் என்பத குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.