பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

 

பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
இந்நிலையில் சென்னையை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்காகவும், தமிழகத்தில் ஜூலை31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையிலும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.