தலைமைக்காவலர் விஷம் அருந்தி தற்கொலை!
Sep 4, 2020, 07:42 IST1599185527000
தலைமை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி காவல் நிலைய தலைமைக் காவலர் பழனி போலீஸ் குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசார் காவலர் பழனியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பணி அழுத்தம் காரணமாக தலைமை காவலர் பழனி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.