முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா இல்லை! – பரிசோதனையில் உறுதி

 

முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா இல்லை! – பரிசோதனையில் உறுதி

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டப் பேரவை சார்பில் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் உள்ளிட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா இல்லை! – பரிசோதனையில் உறுதி


தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற திங்கட்கிழமை (14ம் தேதி) கலைவாணர் அரங்கில் நடக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை நெரிசல் மிகுந்தது என்பதால் கொரோனா காலத்தில் கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் பங்கேற்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்க அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா இல்லை! – பரிசோதனையில் உறுதி


இதில் முதல்வர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் முதல்வர், சபாநாயகர், துணை

முதல்வர், சபாநாயகருக்கு கொரோனா இல்லை! – பரிசோதனையில் உறுதி

முதல்வருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மற்றவர்கள் பற்றிய தகவல் இல்லை. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.