ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை!

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை!

அதிமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் பழனிசாமி மாவட்டவாரியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் பரப்புரைக்காக திருச்சியில் முதல்வர் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு திருச்சி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் பழனிசாமி பழங்களை வழங்கி ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை!

இதை தொடர்ந்து சந்தையில் மக்களையும் வணிகர்களையும் நேரில் சந்திக்கும் முதல்வர் பழனிசாமி சோமரசம்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மணப்பாறையில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார் முதல்வர் பழனிசாமி. பின்னர் மாலை 3 மணியளவில், திருவெறும்பூரில் சிறு, குறு மற்றும் சார்புநிலை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் இறுதியாக நாதர்வாளி தர்காவில் வழிபாடு செய்கிறார்.