வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதல்வர் பிரார்த்தனை!

 

வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதல்வர் பிரார்த்தனை!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

புரெவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது/இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகிய நிலையில் 60 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் நெற்பயிர்கள் நாசமாகின.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதல்வர் பிரார்த்தனை!

இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்திற்கு சென்றார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கிய முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதல்வர் பிரார்த்தனை!

இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் காலை பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். பிரார்த்தனையில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமிக்கு பேராலயம் சார்பில் மாதா சொரூபம் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக நாகூர் ஆண்டவர் தர்கா சுற்றுச்சுவரை காலையில் பார்வையிடும் முதல்வர் பழனிசாமி பின்னர் விளை நிலங்களில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட உள்ளார்.