கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : கள்ளக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

 

கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : கள்ளக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : கள்ளக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளை அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த தருணத்தில் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனையை நம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றி வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : கள்ளக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரதானமாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க, ஏழை எளிய மக்களின் நன்மைக்காக மாவட்டம் தோற்றுவிக்கபட்ட ஆறே மாதத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ளது. இது வைத்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு” என்றார்.