இன்று மாலை முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து உரை!

 

இன்று மாலை முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து உரை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு இன்று மாலை வாழ்த்து உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி.

இன்று மாலை முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து உரை!

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் ஆரவாரமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். பட்டாசு வாங்கவும், புத்தாடை வாங்கவும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்ட நிலையில், இந்த பண்டிகை மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் என்ற நம்பிக்கையில் தீபாவளியை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று மாலை முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து உரை!

தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து தீபாவளி வாழ்த்து உரையாற்றகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்த உள்ளார்.