பொன்.ராதாவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்!

 

பொன்.ராதாவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் கூட்டணிக் காட்சிகளான பாமக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது திமுகவை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பொன்.ராதாவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்!

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து செட்டிக்குளத்தில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற திமுக நாடகம் ஆடுகிறது. மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள். 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது. சரக்கு பெட்டகம் தொடர்பாக திமுக சொல்வதை நம்பாதீர்கள் என்றும் கூறினார்.