டிச.29,30ல் நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை!
Dec 26, 2020, 14:48 IST1608974306000
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் டிச.29 மற்றும் 30 தேதி முதல்வர் பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை நடத்தவிருப்பதாக அமைச்சர் தங்க மணி தெரிவித்துள்ளார். நாளை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், வரும் 28ம் தேதி ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.