“ஞானம் எனும் ஒளியை ஏற்றிக் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகை தீபாவளி” முதல்வர் பழனிசாமி வாழ்த்து

 

“ஞானம் எனும் ஒளியை ஏற்றிக் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகை தீபாவளி” முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“ஞானம் எனும் ஒளியை ஏற்றிக் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகை தீபாவளி” முதல்வர் பழனிசாமி வாழ்த்து

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த இனிய நாளில், நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட, எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வு அமைந்திட, என் தீப ஒளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில், “அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெறுக வாழ்த்துகிறேன். இன்பங்கள் பெருகி அனைத்து நலமும் வளமும் பெற்று ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.