திருவாரூரில் 28 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

 

திருவாரூரில் 28 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதே சமயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் அதிகமாக பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்றின் தீவிரம் வலுவடையும் என கூறப்படுகிறது.

திருவாரூரில் 28 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு!

இந்நிலையில் திருவாரூரில் வரும் 28 ஆம் தேதி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்யவுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.