பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி
Aug 12, 2020, 09:19 IST1597204147000
பவானி சாகர் அணையில் இருந்து 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து வரும் 14 ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846.40 மில்லியன் கன அடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பாவனி சாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு – 29.5 டிஎம்சியாகவும், நீர்வரத்து 5,644 கனஅடியாகவும் உள்ளது. மேலும் பவானிசாகர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1,200 கனஅடியாக உள்ளது.