முடிவுக்கு வரும் ஊரடங்கு : மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை!

 

முடிவுக்கு வரும் ஊரடங்கு : மருத்துவ நிபுணர்கள் குழுவுடன்  முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முடிவுக்கு வரும் ஊரடங்கு : மருத்துவ நிபுணர்கள் குழுவுடன்  முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,31,868லிருந்து 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,277ஆக அதிகரித்துள்ளது.

முடிவுக்கு வரும் ஊரடங்கு : மருத்துவ நிபுணர்கள் குழுவுடன்  முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை!

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார். மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.