மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. தமிழகத்தில் 3 பேர் இறந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர். புதுச்சேரியில் கடுமையான சேதம் ஏற்பட்டதால் சுமார் 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்த சூழலில் தமிழகம் வந்த மத்திய குழுவினர் சென்னை, கடலூர், விழுப்புரம் , தென்சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூரில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் மத்திய குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி கோரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.