அமைச்சர் உதயகுமாருக்கு நேர்ந்த சோகம்…முதல்வர் பழனிசாமி ஆறுதல்!

 

அமைச்சர் உதயகுமாருக்கு நேர்ந்த சோகம்…முதல்வர் பழனிசாமி ஆறுதல்!

தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயகுமாருக்கு நேர்ந்த சோகம்…முதல்வர் பழனிசாமி ஆறுதல்!

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தந்தை போஸ் அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோவில் வளாகத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமாரின் தந்தை போஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தையின் மறைவு செய்தி கேட்டு ஆர்.பி. உதயகுமார் சென்னையிலிருந்து மதுரைக்கு விரைந்தார்.

இந்நிலையில் அமைச்சர் உதயகுமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மாண்புமிகு வருவாய்,பேரிடர் மேலாண்மை மற்றும்
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தந்தை திரு. ஆர்.போஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு.ஆர்.போஸ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.அமைச்சர் உதயகுமாரின் தந்தை உடல் டி.குன்னத்தூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மா கோவில் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.