நடிகர் ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி , கமல் வாழ்த்து!

 

நடிகர்  ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி , கமல் வாழ்த்து!

தாதா சாகேப் பால்கே விருது 100% ரஜினிக்கு பொருத்தம் என்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர்  ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி , கமல் வாழ்த்து!

51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் ரஜினியும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் பழனிசாமி போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தங்களது தன் நடிப்புத் திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக விருது கிடைத்துள்ளது. மேலும் பல விருதுகளைப் பெற வேண்டும் என ரஜினியை வாழ்த்தி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.