‘அறுவை சிகிச்சைக்காக’ முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

 

‘அறுவை சிகிச்சைக்காக’ முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘அறுவை சிகிச்சைக்காக’ முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் . இதில் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

‘அறுவை சிகிச்சைக்காக’ முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளால் அறுவை சிகிச்சையை முதல்வர் பழனிசாமி தள்ளிப்போட்ட நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.