ஆர்.கே.நகரில் களமிறங்கும் எடப்பாடி : போடியில் ஓபிஎஸ்

 

ஆர்.கே.நகரில் களமிறங்கும் எடப்பாடி : போடியில் ஓபிஎஸ்

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-இல் ஆர்.கே.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் பழனிசாமி.

ஆர்.கே.நகரில் களமிறங்கும் எடப்பாடி : போடியில் ஓபிஎஸ்

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகவும் ,தமிழ்நாடு முதலமைச்சராகவும் தனது வாழ்நாளில் மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த, மாபெரும் மக்கள் தலைவி இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 -2-2021 , 28 -2 -2021 , 1-3 -2021 மற்றும் 2-3 -2021 ஆகிய 4 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் களமிறங்கும் எடப்பாடி : போடியில் ஓபிஎஸ்

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24இல் ஆர்.கே.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் பழனிசாமி. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிப்.24, பிப். 28, மார்ச் 1, மார்ச் 2 இல் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. பிப்.24 இல் போடி தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.