நாளை திண்டுக்கல் செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

 

நாளை திண்டுக்கல் செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நாளை(6.08.2020) திண்டுக்கல் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். இதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வனத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கழகச் செயலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிறுவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.