சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

 

சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. நோயின் தீவிரத்தால் அனைவரும் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் சூழலில், படுக்கைகள் நிரம்பிவழிகின்றன. கல்லூரிகள், வர்த்தக மையங்கள் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுவருகிறது.

சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

இந்நிலையில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது தமிழக முழுவதும் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரையில் இந்த சித்தா சிகிச்சை மையங்கள் 33 ஆக அதிகரிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.