3 மாவட்டங்களில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

 

3 மாவட்டங்களில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 31,079பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20லட்சத்து 09ஆயிரத்து 700ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 486 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775ஆக அதிகரித்துள்ளது.

3 மாவட்டங்களில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் சென்னையிலும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து வருகிறது. கோவையில் 3 ஆயிரத்து 937 பேர் நேற்று ஒரேநாளில் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மாநில அளவில் தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது.

3 மாவட்டங்களில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

இந்நிலையில் கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஈரோடு, திருப்பூர், கோவையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.