புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளில் உருவாக்கிடவும், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்த பயன்படுத்தவும் , மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் , நீர்வளத் துறை ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறையின் செயல்பாடுகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் ,புதிதாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புரனமைத்து தூர்வாரி நீரின் கொள்ளளவை அதிகப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், மழை நீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்த பயன்படுத்த மாவட்டங்களில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மாநில நிதி பணிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள் ,அத்திக்கடவு அவிநாசி நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் ,மேட்டூர் நீர் ஏற்றம், ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நபார்டு நிதி உதவியுடன் புதிய தடுப்பு அணைகள் கட்டுதல் மற்றும் நீர் நிலைகளை புனரமைப்பு செய்தல்,செப்பனிடுதல், புரனமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன் நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், விவசாயிகள் நலன் கருதி பல ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருக்கும் நீர் நிலைகளை செப்பனிடுதல், கால்வாய்களை சரிசெய்யவும் முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ,நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் ,பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் ரவிந்திரபாபு ,நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.