“ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் முதல்வர் ” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 

“ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் முதல்வர் ” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்

மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை, முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி மற்றும் சுக்காம்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட மினி கிளினிக்குகளை பொதுமக்களின் சேவைக்காக நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களிடையே பேசிய அவர், இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழ்நாடு தான் மிக சிறந்த மாநிலமாகவும், முன்னணி மாநிலமாகவும் திகழ்வதாக கூறினார்.

“ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் முதல்வர் ” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் சீனிவாசன் கூறினார். இதன்படி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், மருத்துவ சிகிச்சைக்காக பெரு நகரங்களை தேடி செல்வது தவிர்க்கப்படும் என்றும் கூறினார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 இடங்களில் மினி கிளினிக்குகள் செயல்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.