முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!
Oct 13, 2020, 07:32 IST1602554578000
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.
முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சிலுவம்பாளையத்தில் இன்று காலை 9 மணியளவில் தவுசாயம்மாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தனது தாயாரின் இறப்பையடுத்து, இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுகளை முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார்.