அமித்ஷா நலம் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பூரண நலம பெற்று மீண்டு வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது.
அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலம் பெற்றதாக வீடு திரும்பினார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் இயல்பாக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I wish Hon’ble Union Minister Thiru @AmitShah ji speedy recovery, so that he can resume his normal duties and serve the people of our country.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 18, 2020
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் அமித்ஷாவை
டேக் செய்து அவர் மீண்டு வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவாக நலம் பெற்று மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.