ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

 

ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் நடராசன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசரும், சமுதாய உணர்வு மிக்கவருமான திரு.K.M.நடராசன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்” புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்றொரு பதிவில், “புரட்சித்தலைவர் Dr.MGR, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாராட்டைப் பெற்று, வாழும்போதே வரலாறாக வாழ்ந்த திரு.K.M.நடராசன் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.