கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

 

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதலால் அம்மாநில அரசியல் பரபரப்பாக இருக்கிறது. முதல்வர் அசோக் கெலாட் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சச்சின் பைலட்டை கடுமையாக தாக்கினார். அசோக் கெலாட் கூறியதாவது: பைலட் ஒரு விளையாட்டை விளையாடி விட்டார். இது மிகவும் வருத்தமானது, மாநில அரசை கவிழ்க்க சதி நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லி கொண்டே இருந்தேன்.
அவருக்கு அப்பாவியான முகம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நல்ல பேசும் திறமை, ஊடகங்களை ஈர்க்கும் திறமை இருக்கலாம். ஆனால் மாநிலத்தில் அவருடைய பங்களிப்பு என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

கட்சியின் நலனுக்கான அவர் எவ்வளவு வேலை செய்தார் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று எங்களுக்கு தெரியும். கடந்த 7 ஆண்டுகளாக மாநில கட்சி தலைவர் பதவி விலக வேண்டும் என்று கேட்காத ஒரு மாநிலம் ராஜஸ்தான்தான். மாநில தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட்டை நீக்க வேண்டும் என கட்சியின் மூத்த அல்லது ஜூனியர்கள் யாரும் கேட்கவில்லை. அவர் ஒன்றுக்கும் உதவாதவர் என்பது எங்களுக்கு தெரியும், அவர் எதுவும் செய்யவில்லை.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

நீ என்னுடன் இருக்கிறாயா, இல்லையா என்று கேட்டு மக்களை சண்டையிட மட்டுமே சச்சின் செய்தார். காய்கறி விற்க நான் இங்கு இருக்கவில்லை, இங்கு முதல்வராக இருக்கிறேன். இப்போதும் அவரை மதிக்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவரை மதிக்க வேண்டும் என ஒவ்வொரிடமும் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் எங்களது முதுகில் குத்திவிட்டார். மோடி அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்ய இத்தகைய திட்டங்களுக்கு (ஆட்சியை கவிழ்க்க எம்.எல்,ஏ.க்களை விலைக்கு வாங்க) கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.