மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

 

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் எதிரொலியாக நவம்பர் 16 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ காணொலியில் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இரட்டை பதிவுகள், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபடவுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

மேலும் கன்னியாகுமரி எம்பி ஹெச்.வசந்தகுமார் கொரோனா காரணமாக பலியான நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.