“நாங்க யூத்து ,நீ பழைய டெலிபோன் பூத்து “குடிக்காதே என்ற பெரியவரை குடிபோதையில் திட்டி கொலை செய்த இளைஞர்கள் .
ஒரு முதியவரின் வீட்டு வாசலில் தண்ணியடித்து விட்டு ,தம் அடித்த இரு வாலிபர்களை தட்டிக்கேட்ட முதியவரை, அங்கேயே அடித்து இரண்டு வாலிபர்கள் கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
சத்தீஸ்கரில் ராய்ப்பூரில் பிலாய் என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் சார்கேஷ் என்று இரண்டு இளைஞர்கள் திங்கள்கிழமையன்று சௌகான் என்ற 60 வயது முதியவரின் வீட்டருகே தண்ணியடித்துவிட்டு ,தம் அடித்துக்கொண்டிருந்தனர் .இதை பார்த்த சௌகான் அவர்களிடம் “தம்பிகளா! இங்கே தம் அடிக்காதிங்க அப்படி வேறு எங்காவது போய் தம் அடிங்க” என்று கூறியுள்ளார் .
இதனால் அந்த இரண்டு வாலிபர்களும் கடும் கோபமுற்று அந்த முதியவரை தாக்க தொடங்கினார்கள் .அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அவரை 150க்கும் முறைக்கு மேல் அடித்து காயப்படுத்தியுள்ளனர் .பிறகு அவர் இறந்த பிறகும், அவர் இறந்தது கூட தெரியாமல் அங்கிருந்த செங்கல் கொண்டு அவரின் தலையை கடுமையாக தாக்கி, முகத்தினை சேதப்படுத்தியுள்ளார்கள் .பிறகு அவரின் இளைய மகன் வந்தபோது அவரையும் தாக்க தொடங்கியதால், அவர் அங்கிருந்து தப்பி சென்று போலீசை கூட்டி வந்தார் .போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி அந்த இரு வாலிபர்களை கைது செய்து ,அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் .