சிதம்பரம்- கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் கைது!
Oct 4, 2020, 12:10 IST1601793617000
சிதம்பரம்
சிதம்பரம்அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் கொத்தங்குடி தெரு, கோவிந்தசாமி தெரு ஆகிய இடங்களில் செல்போன் மூலம் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், வினோத்(17) ஹரி பிரசாத் (15 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், 3 செல்போன் , எடை போடும் இயந்திரம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இரண்டு பேர்களையும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.