“பாப்பா உனக்கு கொரானா பாசிட்டிவ் ” பொய் சொல்லி சிறுமியை சீரழித்த சிறுவர்கள்…

 

“பாப்பா உனக்கு கொரானா பாசிட்டிவ் ” பொய் சொல்லி சிறுமியை சீரழித்த சிறுவர்கள்…

தமிழகத்தில் சமீபத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை போல ,சத்தீஸ்கரிலும் சமீபத்தில் ஒரு சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .

“பாப்பா உனக்கு கொரானா பாசிட்டிவ் ” பொய் சொல்லி சிறுமியை சீரழித்த சிறுவர்கள்…சத்தீஸ்கரின் கவுரெலா-பெந்திரா-மர்வாஹி (ஜிபிஎம்) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜூலை 1ம் தேதி ஒரு 7 வயது சிறுமி காட்டுக்கு விறகு வெட்ட போயிருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த இரண்டு டீனேஜ் வாலிபர்கள் அந்த சிறுமியிடம் வந்து “பாப்பா உனக்கு கொரானா நோய் வந்திருக்கு” ,என்றனர் .இதை கேட்டதும் அந்த சிறுமி பயத்தில் அழ ஆரம்பித்தார் .அப்போது அந்த இளைஞர்கள் ,”நீ பயப்படாத அதுக்கு எங்க கிட்ட மருந்து இருக்கு எங்க கூட வா ,நாங்க சரி செய்யறோம் “என்று கூறி அந்த சிறுமியினை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர் .

“பாப்பா உனக்கு கொரானா பாசிட்டிவ் ” பொய் சொல்லி சிறுமியை சீரழித்த சிறுவர்கள்…அங்கிருந்து அந்த சிறுமியினை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற அவர்கள் அங்கு வைத்து அவரை பலாத்காரம் செய்து விட்டு ,சிறுமியை அவரின் வீட்டிற்கு அனுப்பி விட்டனர் .அழுது கொண்டே வீட்டிற்கு போன சிறுமி நடந்த விஷயத்தினை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் ,அதை கேட்ட அவரின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் ,சிறுமியினை அழைத்துக்கொண்டு போய் போலிசில் அந்த வாலிபர்கள் மீது புகாரளித்தார்கள் . .உடனே போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ,சிறையில் அடைத்தனர் .