10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி வந்த பா.ஜ.க. தலைவர்… அதிரடியாக கைது செய்த சத்தீஸ்கர் போலீசார்

 

10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி வந்த பா.ஜ.க. தலைவர்… அதிரடியாக கைது செய்த சத்தீஸ்கர் போலீசார்

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. நக்சல்களை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. அதேசமயம் சில உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவுவதால் நக்சல்களை அரசுகளால் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இருப்பினும் முன்பே காட்டிலும் நக்சல்கள் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தெரிகிறது.

10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி வந்த பா.ஜ.க. தலைவர்… அதிரடியாக கைது செய்த சத்தீஸ்கர் போலீசார்

இந்த சூழ்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சல்களுக்கு டிராக்டர் சப்ளை செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ஜகத் பூஜாரி உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லாவ் கூறுகையில், ஜகத் உதவியுடன் நக்சல்கள் டிராக்டர் வாங்கும் தகவல் இன்பார்மர்கள் மூலம் கடந்த சில தினங்களுக்க முன் எங்களுக்கு தெரியவந்தது.

10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி வந்த பா.ஜ.க. தலைவர்… அதிரடியாக கைது செய்த சத்தீஸ்கர் போலீசார்

ஜகத் கடந்த 10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து இதில் செயல்பட்டு கொண்டு இருந்தார் மற்றும் நக்சல்களை சந்தித்த தகவல்களும் இன்பார்மர்கள் வாயிலாக தெரியவந்தது. அடுத்த கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. நக்சல்களுக்கு உதவிய மேலும் பல சப்ளையர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார். நக்சல்களுடன் தங்களது கட்சியை சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்தார் என்ற தகவல் பா.ஜ.க.வுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.