பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆன்லைனில் சொன்னால் போதும்…நேரில் வர வேண்டாம்.. ராமன் சிங் வேண்டுகோள்

 

பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆன்லைனில் சொன்னால் போதும்…நேரில் வர வேண்டாம்.. ராமன் சிங் வேண்டுகோள்

தற்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால், இந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க நேரில் வர வேண்டாம், ஆன்லைனில் தெரிவித்தால் போதும் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக ராமன் சிங் பிறந்த நாளில் பா.ஜ.க. தொண்டர்களும், பொது மக்களும் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க யாரும் வீட்டுக்கு நேரில் வர வேண்டாம் என்று ராமன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆன்லைனில் சொன்னால் போதும்…நேரில் வர வேண்டாம்.. ராமன் சிங் வேண்டுகோள்
ராமன் சிங்

இது தொடர்பாக ராமன் சிங் டிவிட்டரில், நீங்கள் அனைவரும் எனது பிறந்த நாளில் சந்திக்க வேண்டும், நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கொரோனாவிலிருந்து மீண்டேன். உங்கள் உடல் நலம் குறித்து கவலைப்படுகிறேன். அதனால் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன், உங்களது வாழ்த்துக்களை ஆன்லைனில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆன்லைனில் சொன்னால் போதும்…நேரில் வர வேண்டாம்.. ராமன் சிங் வேண்டுகோள்
கோவிட்-19 பரிசோதனை

சத்தீஸ்கரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது