“தடியால் அடித்து ,கல்லை கட்டி ,கிணற்றில் வீசி.. ” -14 வயது சிறுமியை பாடாய் படுத்தி பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் ..

 

“தடியால் அடித்து ,கல்லை கட்டி ,கிணற்றில் வீசி.. ” -14 வயது சிறுமியை பாடாய் படுத்தி பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் ..

செல்போனில் ஆபாச படங்கள் வந்த பிறகு சிறுவர்களின் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது .இதற்கு எடுத்துக்காட்டாக சத்தீஸ்கரில் ஒரு 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான் .

“தடியால் அடித்து ,கல்லை கட்டி ,கிணற்றில் வீசி.. ” -14 வயது சிறுமியை பாடாய் படுத்தி பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் ..

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஜூன் 24 ம் தேதி வீட்டை விட்டு தனது தோழிகளுடன் வெளியே சென்றார் ஒரு 14 வயது சிறுமி .அவர்கள் வீட்டிலோ அவரின் அக்காவின் திருமண வேலையில் அனைவரும் பிசியாக இருந்தார்கள் .வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் ஒரு காட்டுக்குள் கடத்தி சென்று கற்பழிக்க முயன்றான் .ஆனால் அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து ஓட முயன்றதால் அங்கிருந்த ஒரு தடியினை எடுத்து அவர் மண்டையில் போட்டு கீழே அவரை தள்ளி பலாத்காரம் செய்தான் .

“தடியால் அடித்து ,கல்லை கட்டி ,கிணற்றில் வீசி.. ” -14 வயது சிறுமியை பாடாய் படுத்தி பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் ..அதற்கு பிறகு அந்த பெண்ணின் உடலில் அவன் ஒரு கல்லை கட்டி ,அங்கிருந்த ஒரு கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு ஓடி விட்டான் ,அந்த கிணற்றில் மூழ்கி அந்த பெண் இறந்து விட்டார் .
இரண்டு நாட்களாக அந்த சிறுமியை காணாமல் தேடிய அவரின் குடும்பத்தார் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர் .போலீசார் தீவிரமாக விசாரித்து ,அந்த ஊரை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில் அவன் சிறுமியை கெடுத்து கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசிய செயலை ஒப்புக்கொண்டான் .பிறகு அவனை கூட்டிக்கொண்டு போய் அந்த கிணற்றிலிருந்து அந்த பெண்ணின் சடலத்தினை பறிமுதல் செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறர்கள் .