இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

திருவண்ணாமலை

ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவரது மகன் பாலாஜி (28). இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

தகவல் அறிந்த களம்பூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கோவையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹசரப் என்பவரை தேடி வருகின்றனர்.