`நைட்டி ரேட் 599 ரூபாய்; இழந்தது 60,000 ரூபாய்!’- சென்னை பெண்ணை பதறவைத்த ஆன்லைன் மோசடி கும்பல்

 

`நைட்டி ரேட் 599 ரூபாய்; இழந்தது 60,000 ரூபாய்!’- சென்னை பெண்ணை பதறவைத்த ஆன்லைன் மோசடி கும்பல்

ஆன்லைனில் 599 ரூபாய்க்கு நைட்டியை ஆர்டர் செய்த பெண்ணின், வங்கிக் கணக்கில் 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளது கும்பல் ஒன்று. இது குறித்து சைபர் க்ரைம் பிரிவில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

`நைட்டி ரேட் 599 ரூபாய்; இழந்தது 60,000 ரூபாய்!’- சென்னை பெண்ணை பதறவைத்த ஆன்லைன் மோசடி கும்பல்

சென்னை கொரட்டூரை சேர்ந்த செல்வராணி (32) என்பவர் கடந்த 30ம் தேதி கிளப் பேக்டரி என்கிற ஆன்லைன் செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தை தன்னுடைய கணவரின் டெபிட் கார்டு மூலம் ஆன்லைனிலேயே செலுத்தியுள்ளார். ஆனால், மத்திய அரசு, சீன செயலிகளுக்கு தடை விதித்ததால் செல்வராணிக்கு நைட்டி டெலிவரி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனே, நைட்டிக்கான ஆர்டரை கேன்சல் செய்த செல்வராணிக்கு, பணம் திரும்ப செலுத்தப்படும் என எந்தவித மெசேஜும் வரவில்லை. இதைத் தொடர்ந்து ஆன்லைன் செயலியின் கஸ்டமர்கேர் நம்பருக்கு போனில் பேசி விவரத்தைக் கூறியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர், உங்களின் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றால் வங்கி விவரம், டெபிட் கார்டை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கும்படி எனக் கேட்டுள்ளார்.

`நைட்டி ரேட் 599 ரூபாய்; இழந்தது 60,000 ரூபாய்!’- சென்னை பெண்ணை பதறவைத்த ஆன்லைன் மோசடி கும்பல்

இதனை நம்பிய செல்வராணி, உடனே தனது கணவரின் வங்கியின் விவரங்களையும், டெபிட் கார்டையும் அனுப்பியுள்ளார். அதன் பின்னர், அந்த நபர், ப்ளே ஸ்டோருக்குச் சென்று நாங்கள் சொல்கிற செயலியை டவுன்லோடு செய்யும்படி கூறியுள்ளார். அதனையும் செல்வராணி டவுன்லோடு செய்துள்ளார். பின்னர், வங்கியிலிருந்து செல்வராணியின் கணவரின் செல்போனுக்கு, 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதையடுத்து, மனைவியை தொடர்பு கொண்ட கணவர், எனது வங்கிக் கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால் செல்வராணி அதிர்ச்சியடைந்தார். மீண்டும் கஸ்டமர்கேர் நம்பருக்கு போன் செய்து 60,000 ரூபாய் பிடித்தம் செய்த விவரத்தைக் கூறியுள்ளார் செல்வராணி. அப்போதும், மீண்டும் செயலியை டவுன்லோடு செய்யுமாறு கஸ்டமர்கேரிலிருந்து பேசியவர் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த செல்வராணி, செல்போனிலேயே கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக கஸ்டமர் கேர் போன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராணி, இந்த மோசடி குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவவலர்கள், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் செல்வராணி புகார் அளித்தார். அந்த புகாரில் கஸ்டமர்கேர் நபரிடம் பேசிய ஆடியோவையும் இணைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`நைட்டி ரேட் 599 ரூபாய்; இழந்தது 60,000 ரூபாய்!’- சென்னை பெண்ணை பதறவைத்த ஆன்லைன் மோசடி கும்பல்

அந்த ஆடியோவில், `ஹலோ சார்’ என்று செல்வராணி பேசுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசுபவர் `சொல்லுங்க மேடம்’ என்று சொல்கிறார். உடனே செல்வராணி, `550 ரூபாய் பணத்தை திரும்பத் தர வேண்டும்’ என்று கேட்கிறார். அதற்கு கஸ்டமர் கேரில் பேசும் நபர், `நீங்கள் அப்ளிகேசனை டவுன்லோடு செய்யுங்கள்’ என்று பதிலளிக்கிறார். உடனே செல்வராணி, `இனிமேலும் நான் ஏமாற மாட்டேன். என்னுடைய பணத்தை திரும்பத் தந்தால் போதும்’ என்று சொல்கிறார். அதற்கு கஸ்டமர் கேர் ஊழியர், `5 நிமிடத்தில் பணம் வந்துவிடும்’ என்று சொல்கிறார். ஆத்திரமடைந்த செல்வராணி, `நீ எல்லாத்தையும் எடுத்துவிட்டு ஓடிப்போய்விடணும்ன்னு இருக்க’ என்று தமிழில் கூறுகிறார். உடனே `என்ன மேடம் சொல்லுறீங்க’என்று கஸ்டமர் கேர் ஊழியர் கேட்பதோடு ஆடியோ முடிவடைகிறது.

இந்த ஆன்லைன் மோசடி குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது, தங்கள் வங்கி விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று பல விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தினாலும் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைக்கிறார்கள். கொரட்டூரை சேர்ந்த செல்வராணியும் இப்படிதான் வங்கி விவரங்களை கொடுத்து 60 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இணையதளத்தில் கஸ்டமர்கேர் என்று மோசடி கும்பல்கள் தங்களுடைய நம்பர்களை பதிவு செய்து வைத்துள்ளனர். அதனால் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வதற்கு முன் அது உண்மையான நம்பரா என்பதை செக் செய்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர்.