வானகரம் பூ மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் தவிப்பு

 

வானகரம் பூ மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் தவிப்பு

சென்னை

சென்னையில் நேற்று மாலை கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக வானகரம் பூச்சந்தை தண்ணீர் சூழ்ந்து குளம் போல காட்சியளித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூமார்க்கெட் தற்காலிகமாக வானகரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

வானகரம் பூ மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் தவிப்பு

இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பூமார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்துகொண்டது. இதனால் மலர்சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆயுதபூஜை பண்டிகை

வானகரம் பூ மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் தவிப்பு

நெருங்கும் வேளையில் பூவியாபாரம் அதிகரிக்கும் எனவே கோயம்பேடு பூ மார்கெட்டை மீண்டும் திறந்து பூ வியாபாரிகளின் வாழவாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.