சென்னை- பசுமாட்டை திருட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

 

சென்னை- பசுமாட்டை திருட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

சென்னை

சென்னை குன்றத்தூரி இரவில் பசுமாட்டை திருட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அருகாமையில் நேற்று முன்தினம் இரவு கட்டி வைக்கப்பட்டிருந்த

சென்னை- பசுமாட்டை திருட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

பசுமாடு மற்றும் கன்றுகுட்டியை மர்மநபர்கள் இருவர் வேனில் கடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட மாட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

சென்னை- பசுமாட்டை திருட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

இதனையறிந்து அங்கு வந்த கொள்ளையர்களின் நண்பர்களையும் பொதுமக்கள் பிடித்து குன்றத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் குத்தம்பக்கத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ்(30) மற்றும் அவரது

சென்னை- பசுமாட்டை திருட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

கூட்டாளி ஆட்டோ ஓட்டுநர் மோகன்(25) என்பது தெரியவந்தது. மேலும், அருகாமையில் லோடு இறக்க வந்தபோது, மாடு மற்றும் கன்றுகுட்டியை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மாட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.