சென்னை- தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

 

சென்னை- தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம் தேதி அன்று

சென்னை- தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பபீனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, ஆவடி காவல் ஆய்வாளர் ராஜாகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார்,

சென்னை- தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருநின்றவூரை சேர்ந்த் சுரேஷ்(19) மற்றும் ரிஷி(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து புழல் சிறையில் அடைத்தனர்.